Wednesday 19 February 2014

வாழ்வுதரு கந்தவேளே!

கிளிநொச்சி கந்தவேள் வணக்கப் பாமலர்
-இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் -

மண்ணோடு மண்ணாக மாய்ந்தே வருந்திடும்
          மக்களின் துயர் துடைப்பாய்
மனிதரை மாடாக மறந்தும் மதிப்பவர்
          மானந் தகர்தெறிகுவாய்
நண்ணியே நின்பாத நற்பூசை செய்திடும்
          நல்லவர்க் கருளீகுவாய்
நாடெலாஞ் செந்நெல் விளைந்தே சிறந்திட
          நல்லமழை பொழிய வைப்பாய்
கண்ணோடு கண்ணான குஞ்சரி மணாளனே
          கல்விசெல் வந்தருகுவாய்
காதார வேழைக ளழுங்குரல் கேட்டுமே
          கசியாத தென்னமுருகா
வண்ணமயில் வாகனா ஆயுள்தந் தேயெமை
          வாழ்விக்க வேண்டுமையா
வணங்கார் வணங்கிடும் கிளிநொச்சி நன்னகர்
          வாழ்வுதரு கந்தவேளே!

No comments:

Post a Comment