Friday 7 February 2014

வந்தருள் தருவாய்!

முருகா என்று ஒருமுறை சொன்னேன்
          உருகிடும் உள்ளத் துணர்வுடன் ஒன்றி
பருகிடத் தந்தாய்! பைந்தமிழ் இன்பம்!
          பழமுதிர் சோலைக் காட்டகம் தன்னில்
திருநிறை முதுமையும் திகழ்ஒளிர் மேனியும்
          துலங்கிட வந்த பழமையை எண்ணி
வருவாய் என்றே வயலூர் வந்தேன்
         வந்தருள் தருவாய்! வயலூர் மன்னி!  

No comments:

Post a Comment