Wednesday 12 February 2014

அடிசில் 78

இறால் பூண்டுப் பிரட்டல் 
- நீரா -

தேவையான பொருட்கள்:
இறால் - 300 கிராம்
சிறிதாக வெட்டிய தக்காளி - 2
சிறிதாக வெட்டிய வெங்காயம் - 2 மே. கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம் 
அரைத்த பூண்டு - 1 மே.கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி 
மிளகாய்த்தூள் - 2 தே.கரண்டி
மஞ்சள்தூள் - 1 தே.கரண்டி
எலுமிச்சம் புளி - 1 மே.கரண்டி 
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 மே. கரண்டி 

செய்முறை: 
1. ஒரு பாத்திரத்துள் எலுமிச்சம் புளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் நான்கையும் சேர்த்துக் கலந்து அதனுள் சுத்தம் செய்த இறாலைப் போட்டுப் பிரட்டி இருபது நிமிடம் ஊறவிடவும்.
2. இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு போட்டுத் தாளித்து அது வெடித்ததும் கறிவேப்பிலை, வெங்காயம், அரைத்த பூண்டு சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் பொன்னிறமாகப் பொரிந்து வரும் போது தக்காளி சேர்த்து வதக்கவும்.
4. தக்காளி வெந்து தண்ணீர் வற்றி திரண்டு வரும் போது ஊறவைத்துள்ள இறாலைப் போட்டுக் கிளறவும்.
5. அதனுள் கொஞ்சம் தண்ணீர் தெளித்து இளஞ்சூட்டில் பிரட்டலாக வரும்வரை வேகவிட்டு இறக்கவும்.

No comments:

Post a Comment