Tuesday 15 May 2012

தமிழீழத் தேசியக் கொடி

















செந்தமிழ் அன்னையின் செழுமையைக் காட்டி
செஞ்சுடர் வீசிப் பறக்குது பாரீர்
வஞ்சியாம் அவளின் வன்மையைக் காட்டி
வெஞ்சுடர் வீசிப் பறக்குது பாரீர்
கார்த்திகைப் பூவின் கவின் எழில் காட்டி
கதிரெழில் வீசிப் பறக்குது பாரீர்
மாவீரர் தம்மின் மாண்மையைக் காட்டி
மாணொளி வீசிப் பறக்குது பாரீர்
வேங்கைகள் நாமென்ற வேட்கையைக் காட்டி
வெய்யொளி வீசிப் பறக்குது பாரீர்
ஓங்கு தமிழரின் உயர்வினைக் காட்டி
ஓங்கெழில் வீசிப் பறக்குது பாரீர்
தமிழீழ மண்ணின் தகைமையைக் காட்டி
தண்ணொளி வீசிப் பறக்குது பாரீர்
தமிழீழத் தேசியக் கொடி இது பாரீர்
தரணியோர் ஒன்றாய் வணங்குவம் வாரீர்.
 - (1991ல் வீரமரணம் எய்திய எனது தம்பி சிவகெங்காதரன் (நெல்சன்) அவர்களுக்கு கண்ணீர்க்  காணிக்கையாக அவனின் வீரமரணத்தின் போது எழுதியது)

No comments:

Post a Comment