Thursday 3 May 2012

அடிசில் 23


தாமரைவிதை அல்வா
                                                     - நீரா -
தேவையான பொருட்கள்:
கோது இல்லாத தாமரை விதை - 300 
சீனி - 200 கிராம்
பட்டர் - 125 கிராம்
முந்திரிப் பருப்பு - 50 கிராம்
தண்ணீர்  - 200 மி. லீற்றர்
எலக்காய் தூள் - 1 சிட்டிகை
உப்பு -  சிட்டிகை



செய்முறை:
  1. தாமரைவிதையை 4 மணி நேரம் ஊறவிட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீரைச் சூடாக்கி சீனி, ஏலத்தூள் சேர்த்து, கையில் ஒட்டும் பதத்தில் பாணியாகக் காய்ச்சிக் கொள்க.
  3. வாயகன்ற பாத்திரத்தில் பட்டரை உருக்கி முந்திரிப்பருப்பை பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.
  4. அந்த பட்டரினுள் அரைத்த விழுதைப் போட்டு இளம் சூட்டில் கிளறவும்.
  5. நெய் பிரிந்து வரும் பொழுது சீனிப்பாணி, உப்பு, பொரித்த முந்திரிப்பருப்பு சேர்த்துக் கிண்டவும்.
  6. எல்லாம் ஒன்றாக கரண்டியுடன் திரண்டு வரும் போது இறக்கி நெய்பூசிய தட்டில் கொட்டி, பரப்பி விரும்பிய வடிவில் துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.
குறிப்பு:
தாமரைவிதை வயது போவதால் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி இளமையாகத் தோன்றச் செய்யும். 
கருவுற்றிருக்கும் போது தாமரைவிதை உண்பதைத் தவிர்க்கவும்.

No comments:

Post a Comment