Friday 18 May 2012

புத்தன் புனிதன் தானா!



முதலில் அவன் மானுட தர்மத்தை மறந்தவன்,
பிறந்ததோ அரச குடி, அந்தக் குடிக்கு 
ஆற்ற வேண்டிய கடமையை அவன் மறந்தான்,
மணந்தான் அரசகுல மகளை, அவளுக்கு
செய்து கொடுத்த சத்தியத்தை அவன் மறந்தான்,
பெற்றான் ஒரு மகனை, அவனுக்கு
செய்ய வேண்டிய நன்மையை அவன் மறந்தான், 
இப்போது உங்கள் மனதைத் தொட்டு
சிந்தித்து சொல்லுங்கள் புத்தன் புனிதன் தானா?
புத்தன் புனிதன் என்ற பெயரால் உலகினில் 
காலங்காலமாக எத்தனை கோடி உயிர்ப்பலி!
புத்தன் சொன்னதை புவனம் நன்றே கேட்டதா?
புத்தனின் நிர்வாணம் எத்தர்களின் புரிதலில்
புல்லும் ஆடை நீக்கும் நிர்வாணம் ஆனதா?
கொல்லா அறக்கொள்கை எங்கே போனது?
பதில் சொல்லுங்கள் புத்தன் புனிதன் தானா!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment