Wednesday 16 May 2012

திருக்கோணேஸ்வர நாதர்

 திருக்கோணேஸ்வர நாதர்
வணக்கப் பாமலர்
- இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் - [எனது தந்தை]



“எத்தனை சென்மங்கள் அழுது தொழுதேன் ஐயா
                    இதயம் கசிந்த துண்டோ
          இறைவனே செல்வமருள் என்றே இரந்தவற் 
                    இழிவான வறுமை ஈந்தீர்
முத்தான வாழ்வை யான் வாழ முடியாமலே
                     முயற்சி செய்தே பிழைத்தேன்
          முதல்வனே முயல்வார் படும்பாடு கண்டு யான்
                     முன்னின்று தொண்டு செய்தேன்
மெத்தவுடல் நொந்த நான் வீரமருள் என்றேன்
                     மேலுமெனை மெலிய வைத்தாய்
           மேதினியி லென் செய்வேன் பணிந்தே நடந்தனன்
                      மேலோர் தம்வரிசையீந்தார்
அத்தனே உன்னை யான் கேட்டவை யளித்திடின் 
                     அகந்தையால் அழிந்திருப்பேன்
          ஆதியே தென்கைலை அப்பனே அடைகலம்
                     அறிந்து நீ அருள்க நன்றே”
                                   
மனதை இந்த நிலையில் உயர்த்தி மகிழ்வுற வைத்துக் கொள்ள வேண்டும். உண்மை வாழ்வு இது தான். “போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து” 
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment