Thursday 29 June 2017

நித்தமும் எங்கள் நெஞ்சுறைவாள்!


சூலமேந்து சுடர்தொடியாள் சூரனையே வதைத் தெழுந்தாள்
ஆலமுண்ட கண்டனையே ஆருயிராய் பாகம் கொண்டாள்
கோலமேனி தையலவள் காதலால் வந்த ணைப்பாள்
நீலமேனி வாலிழையாள் நித்தமும் எங்கள் நெஞ்சுறைவாள்
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment