பஞ்சு போன்ற மயிரும் - நல்
பவள மூக்கு முடைய
பஞ்ச வண்ண அணிலே - உன்
பழமை என்ன சொல்வாயா
பஞ்சிக் கால் தன்னிலே - தீம்
பழம் பிடித்து உண்ணும்
பிஞ்சு விரலின் கீறல் - ஏன்
படுவ தில்லை சொல்வாயா
அஞ்சி ஓடும் போதும் - நின்
அழகு கொஞ்சம் கூடும்
எஞ்சி விட்ட பழத்தின் - ருசி
ஏறுவ தேன் சொல்வாயா
குஞ்சம் போல் வாலும் - கருங்
கண்ணு முள்ள அணிலே
கெஞ்சி மெல்ல கேட்கிறேன் - உன்
கொஞ்சு மொழியிற் சொல்வாயா
கொஞ்சு மொழியிற் சொல்வாயா
- சிட்டு எழுதும் சீட்டு 141
இனிதே,
தமிழரசி.
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment