Friday 9 June 2017

பஞ்ச வண்ண அணிலே!


பஞ்சு போன்ற மயிரும் - நல்
பவள மூக்கு முடைய
பஞ்ச வண்ண அணிலே - உன்
பழமை என்ன சொல்வாயா

பஞ்சிக் கால் தன்னிலே - தீம்
பழம் பிடித்து உண்ணும்
பிஞ்சு விரலின் கீறல் - ஏன்
படுவ தில்லை சொல்வாயா

அஞ்சி ஓடும் போதும் - நின்
அழகு கொஞ்சம் கூடும்
எஞ்சி விட்ட பழத்தின் - ருசி
ஏறுவ தேன் சொல்வாயா

குஞ்சம் போல் வாலும் - கருங்
கண்ணு முள்ள அணிலே
கெஞ்சி மெல்ல கேட்கிறேன் - உன்
கொஞ்சு மொழியிற் சொல்வாயா
                                            - சிட்டு எழுதும் சீட்டு 141
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment