என் பேத்தி - மகிழினி
வண்ண மகளே வா
வடி வழகே வா
உண்ண உணவு பார்
உறங்கத் தொட்டில் பார்
கண்ணின் மணியே வா
காதல் மொழியே வா
கலைகள் பலவும் பார்
கருத்தில் இனிக்கும் பார்
மண்ணின் மலரே வா
மழலை ஞிமிரே வா
மழையின் துளியை பார்
மரத்தின் தளிரை பார்
மரத்தின் தளிரை பார்
விண்ணின் மதியே வா
வெற்றித் திருவே வா
விண்ணின் ஒளியை பார்
விளையும் பயிரை பார்
தண்ணென் முகிலே வா
தாவி யணைக்க வா
தென்னன் தமிழை பார்
தெளிந்த சுவையை பார்
இனிதே,
தமிழரசி.
சொல்விளக்கம்:
ஞிமிறு - தேனி
குறிப்பு:
என் பேத்தி மகிழினிக்கு பாடியது.
04/06/2017
No comments:
Post a Comment