Tuesday 20 June 2017

அருகே நண்ணி அருள்வாயே!


வயலூர் உறையும் வடிவேலா
          வழக்கொன் றுண்டு வருவாயே
கயலூர் தடாகத் தாமரையாள்
          கனிந்தே வந்து பிறந்தாளே
மயலார் காதல் மயக்கமதில்
          மனதைத் தொடுத்தே நின்றாளே
அயலார் காணும் அரங்கதனில்
          அருகே நண்ணி அருள்வாயே!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment