புங்கைநகர் வாழும் எங்கள் புனிதம்மா
பொற்கரந்தனைப் பிடித்தோம் அருளம்மா
தங்கைவருந்தி யுழைப் போரைப் பாரம்மா
தண்ணீர்க்கு வழியுமில்லை ஏனம்மா
செங்கயல் பாயும் செழுங்கழு நீரும்
செந்நெலும் பொலிந்திடச் செய்திடம்மா
நங்கையர் வாழ்வு நாளும் நலியுதம்மா
நம்மின முய்ய நயந்திடம்மா
நம்மின முய்ய நயந்திடம்மா
இனிதே,
தமிழரசி.
தமிழரசி.
No comments:
Post a Comment