Thursday 9 October 2014

மகராசியற்கொரு வார்த்தை!

திருக்கோணேஸ்வர நாதர்
வணக்கப் பாமலர்
- இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் - [எனது தந்தை]

மக்களைப் பெற்றுமகிழ் மகராசியற்கு கொரு
      வார்த்தை சொலக் கேண்மினே
மானுடப் பிறவியிது தேடுதற் கரிதுபெறின்
      மாண்புபெறு கல்வி வேண்டும்
பக்கத்தி லுள்ளவரும் வாழவேண்டும் நீவீர்
      பகையா திருக்க வேண்டும்
பரமனடி தொழவைத்து மதலையரை வளருங்கள்
      பண்புதான் உயர் செல்வமாம்
மிக்கநிதி நீண்டிடில் நீதிக்கு மீயுங்கள்
      மிஞ்சுவது புகழொன்று தான்
மயனாரின் மகளாய் மாந்தைபதி வாழ்ந்தவருள்
      மங்கை மனமகிழ் நாதராய்  
தக்கனையும் எச்சனையும் தடித்த பெருநீதியாய்த்
      தழைத் துலகமான தருவே
தர்மவுரு வாய்வந்து தென்கையிலை மேவிவளர்
      சச்சிதா னந்த மலையே!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment