Friday 3 October 2014

அடிசில் 85

அன்னாசிக்கறி
 - நீரா -      

தேவையான பொருட்கள்:
சிறிய அன்னாசி - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3பொரிக்க
கடுகு - ½ தேக்கரண்டி
சீரகம் - ½ தேக்கரண்டி
கறிவேற்பிலை - கொஞ்சம் 
செத்தல் மிளகாய் - 2
எள்ளு - 1 மேசைக்கரண்டி
தேங்காய்த்துருவல் - 1 மேசைக்கரண்டி
பழப்புளி - சிறிதளவு 
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.


செய்முறை: 

  1. அன்னாசியின் தோலைச்சீவி சிறுதுண்டுகளாக வெட்டிக் கொள்க.
  2. செத்தல் மிளகாய், எள்ளு, தேங்காய்த்துருவல் மூன்றையும் தனித்தனியே மணம் வரும்வரை வறுத்து அரைத்துக்கொள்க.
  3. ஒருகப் தண்ணீரில் பழப்புளியைக் கரைத்து வைத்துக் கொள்க.
  4. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய் இட்டுத் தாளிக்கவும்.
  5. தாளிதம் பொன்னிறமாக வரும்பொழுது அதற்குள் வெட்டிய அன்னாசி, உப்பு, மஞ்சள் தூள் போட்டு கிளரவும்.
  6. அவை இரண்டு நிமிடம் வெந்ததும் அரைத்து வைத்துள்ள கூட்டையும் கரைத்த புளியையும் விட்டு கலந்து வேகவிடவும்.
  7. கறிதடித்து வரும்போது இறக்கவும்.

No comments:

Post a Comment