Sunday 12 October 2014

அடிசில் 86

காளான் பிரட்டல்
- நீரா -      

தேவையான பொருட்கள்: 
காளான்  - 300 கிராம்
சிறிதாக வெட்டிய வெங்காயம் - ½ கப்
சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1 தே.கரண்டி
பெருஞ்சீரகத்தூள் - ½ தே.கரண்டி
மஞ்சள்தூள் - ¼ தே.கரண்டி
வெந்தயம் - ½ தே.கரண்டி
கடுகு - ½ தே.கரண்டி
சீரகம் - ½ தே.கரண்டி
பால் - 1 மே.கரண்டி 
எண்ணெய் -½ மே.கரண்டி 
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
1. காளானை கழுவி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்க.
2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு போட்டு தாளிக்கவும்.
3. கடுகு வெடித்ததும் வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய்  சேர்த்து பொன்னிறமாக பொரிய விடவும்.
4. அதற்குள் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கிளறி, காளானைச் சேர்த்து பிரட்டி, உப்புச்சேர்த்து  மிதமான சூட்டில் வேகவிடவும். [காளான் வேக காளானில் இருக்கும் தண்ணீர் போதுமானதால் தண்ணீர் விடத்தேவையில்லை].
5. காளான் வெந்ததும் பெருஞ்சீரகத்தூள் இட்டுக் கிளறி, பால் சேர்த்து வேகவிட்டு குழம்பு வற்றி பிரட்டலாகவரும் போது இறக்கவும்.

No comments:

Post a Comment