Monday 20 October 2014

ஏழையெனக்கு அருள்வதற்கே!



அன்னைமுன் அமர்ந்து நல்ல
அழகு தமிழ் பாடல் சூட
என்தமிழை உண்ணி மன
மெங்கும் தேடல் உற்றேன்
கன்னித்தமிழ் தாயவளும் இன்ப
கரும்பெனப் பாடல் தந்தாள்
என்னதவம் செய்திட்டேன் ஏழை
         எனக் கருள்வதற்கே
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment