Monday 6 October 2014

புங்கைநகர் வளர்ப்போம்!



மாடு வளர்ப்போம் மற்றும் அதனருகே
காடு வளர்த்து கழனிகள் செய்வோம்
ஊடே நீர்நிலைகள் சமைத்து நிலத்தின்
பாடு பார்த்து பக்குவம் செய்வோம்
வாடும் வயல்கள் இன்றி வளங்கொழிக்க
ஓடும் நீர்கால்வாய் பலவும் செய்வோம்
தேட மரநிழல்கள் இன்றி தெருக்கள்
வாடும் நிலை தகர்த்தெறியச் செய்வோம்
வீடு சமைக்க நிலமரங்கள் வெட்டும்
கேடு கெட்ட குணத்தை குழிபறிப்போம்
பாடு பட்டே பயிர்வளர்த்து நாளும்
நாடு வளர்ப்போம்! புங்கைநகர் வளர்ப்போம்!
                                            - சிட்டு எழுதும் சீட்டு 92

No comments:

Post a Comment