Friday 24 October 2014

அடிசில் 87

உழுத்தங்களி
- நீரா -      

தேவையான பொருட்கள்:
உழுத்தம் மா - ½ கப்
அரிசி மா -  ¾ கப்
தேங்காய்த் துருவல் - 1½ கப்
சர்க்கரை - ¾ கப்
நல்லெண்ணெய் - 1 மேசைக் கரண்டி
உப்பு - ½ சிட்டிகை

செய்முறை: 

  1. தேங்காய்த்துருவலை மிக்சியில் இட்டு அரைக்கப் தண்ணீர்விட்டு அரைத்து, முதற்பாலை வடித்து எடுத்துக்கொள்க. 
  2. பிழிந்த தேங்காய்த்துருவலுக்குள் நான்கு கப் தண்ணீர் விட்டு மீண்டும் அரைத்து பாலை வடித்து எடுக்கவும்.
  3. இந்தப்பாலை வாயகன்ற பாத்திரத்தில் விட்டு, உழுத்தம் மா, அரிசிமா, சர்க்கரை, உப்பு நான்கையும் சேர்த்துக் கரைத்து, முதற்பாலில் அரைவாசியையும் விட்டுக் கலக்கவும்.
  4. அப்பாத்திரத்தை அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து துளாவி அடிப்பிடியாது கிண்டவும்.
  5. மாக்கரைசல் இறுகி வரும்போது நல்லெண்ணெயைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிண்டி, களி முழுவதும் திரண்டு, கிண்டும் கரண்டியுடன்  வரும்பொழுது இறக்கவும்.
  6. மிகுதியாக இருக்கும் முதற்பாலில் களியைத் தொட்டு உண்ணலாம்.

No comments:

Post a Comment