Sunday 19 October 2014

வாழ்க்கையின் தத்துவம்!


வாழ்க்கையின் தத்துவம் சொல்ல வந்தேன்
வயதில்லை எனக்கென்று எண்ண வேண்டாம்
வாழ்க்கை தந்திடும் பாடங்கள் கோடி
வாடிய வயிற்றுடன் கஞ்சிக்கு ஓடி
வாழ்க்கையின் பாடங்கள் கற்றவர் கோடி
வறுமையின் பிடியினில் வாழ்க்கையைத் தேடி
வாழ்ந்திடக் கற்றவர் கோடானு கோடி
வறுமையைப் போக்க வளமதைத் தேடி
வாழ்ந்திட நினைக்கும் மானுடர் கேட்பீர்!
வறுமை என்பதை வளமது போக்கா
வாழ்வாங்கு வாழ்ந்திட வேண்டின் நிதம்
வறுமையில் செம்மையாய் வாழ்ந்திட வேண்டும்
வாழ்க்கையின் முடிவே பிடிசாம்பல் தானே
வாழ்க்கையின் தத்துவம் வேறென்ன கண்டீர்!
இனிதே,
தமிழரசி. 

No comments:

Post a Comment