Thursday 4 October 2012

பவனிவரும் மானிடரே!

















தார் உருகும் வீதியில்
தகிக்கும் வெய்யிலென
குளிரூட்டிய பேரூந்தில்
மிடுக்காகப் பவனிவரும்
மானிடரே!

கருங்கல்லை பொளிந்து
நல் அம்மியும் குழவியும்
வடிக்கத் தெரிந்த 
என் தாய்க்கு,

உங்கள் மனமெனும்
நெஞ்சப் பாறைகளைப் 
பொளிய கூர் உளியும்
சுத்தியலும் கிடைக்கவில்லையே!
                                                     - சிட்டு எழுதும் சீட்டு 42

No comments:

Post a Comment