Sunday 7 October 2012

நயினை சிவ நாகராஜ நாயகி


கீதமேடையில் பாடுவாள் - தினம் 
           கீதநாத சொரூபினி
வேதமேடையின் வித்தகி - நல்ல 
            வேதஞான ரூபினி

பாதகிண்கிணி ஆர்க்கவே - பதம் 
            பாடியாடு பாவகி
நாதமேடையில் ஆடுவாள் - நிதம் 
            நாகபூசண நாதகி

மோகமேடையின் மோகினி -மன 
           மோனராக மாயகி
நாகமேடையில் தூங்கிடும் - சிவ
            நாகராஜ நாயகி
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment