Thursday 25 October 2012

ஆசைக்கவிதைகள் - 46


மன்னி மன்னிப் போறவளே!


















அழகான பெண்களைக் கண்டால் அவர்களின் வயதைப் பற்றிய கவலை சிறிதும் இல்லாது ஆண்கள் கிண்டல் செய்வது வழக்கம். மார்பளவு தண்ணியில் நடந்து செல்லும் பெண்ணின் மார்பைப் பார்த்து ஆண் கிண்டல் செய்வதையும், அதற்கு அப்பெண் சொல்லும் பதிலையும் திருகோணமலையின் இந்த நாட்டுப்பாடல்கள் சொல்கின்றன. அவன் மாதளங்காய் என்று அவளது மார்பை சுட்டியதற்கு, அவள் தன் மார்பை மாம்பிஞ்சு என்றும், குழந்தையை பாலப்பிஞ்சு என்றும் கூறுவது நாட்டுப்புற வழக்கத்தை அழகாகச் சொல்கிறது. பெண் சொல்லும் பதிலின் முடிவு “பால் முலயடா பாதகா” என்று ஏசுவதாகவும், “பால் முலையடா பாரெடா” என்று கூறுவதாகவும் இருக்கின்றது. அது கூறும் பெண்ணின் இயல்பைப் பொறுத்தது.

ஆண்: மார்பளவு தண்ணியில
                     மன்னி மன்னி போறவளே!
            மாரிலே ஆடுமந்த
                     மாதளங்காய் என்ன விலை?

பெண்: மாதளங் காயும் அல்ல
                       மாவடு பிஞ்சும் அல்ல
             பாலப் பிஞ்சு குடிக்கும்
                       பால் முலயடா பாதகா!            
                             -  நாட்டுப்பாடல் (திருகோணமலை)
                                        பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

No comments:

Post a Comment