Saturday 20 October 2012

சிறுவர்கள் நாம் இங்கு கூடி



சிறுவர்கள் நாம் இங்கு கூடி 
கானுயர் பெருங்காடு சூழ் 
குளத்தினை நாடி
வானுயர் மரத்தினைத் தேடி
விடுவிடெனத் தாவி ஏறி,
சேணுயர் கொம்பினில் ஆடி 
சடசடென நீரிடைப் பாய்ந்து 
நாணெறி அம்மென நீந்தி
நித்தலும் விளையாடி
செப்படி வித்தைகள் 
செய்குவம் பாரீர்!
                - சிட்டு எழுதும் சீட்டு 43

No comments:

Post a Comment