Saturday 27 October 2012

அடிசில் 38


உருளைக்கிழங்கு ரொட்டி
                              - நீரா -

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு  -  2
வெட்டிய கீரை  -  ½  கப் 
வெட்டிய வெங்காயம்  -  1 
வெட்டிய பச்சைமிளகாய்  -  1
வெட்டிய கருவேப்பிலை   -  கொஞ்சம்
மிளகாய்ப் பொடி  -  ½ தேக்கரண்டி
மாங்காய்ப் பொடி  -  ½ தேக்கரண்டி
சீரகம்  -  1 தேக்கரண்டி
கடுகு  -  1 தேக்கரண்டி 
உப்பு  -  தேவையான அளவு
எண்ணெய்  -  ½ மேசைக்கரண்டி

ரொட்டிக்கு தேவையானவை: 
கோதுமை மா  -  1¼ கப்
தண்ணீர்  -  ½ கப்
உப்பு  -  1  சிட்டிகை

செய்முறை:
1.  உருளைக்கிழங்கை அவித்து,  உரித்து, உதிர்த்திக் கொள்க.
2.  பாத்திரத்தில் எண்ணெய்விட்டு கொதித்தடும் கடுகைத் தாளித்து, சீரகம், பச்சைமிளகாய், வெங்காயம், கருவேப்பிலை என்பவற்றை வதக்கி வெட்டிய கீரை, மிளகாய்ப் பொடி, மாங்காய்ப் பொடி, உப்புச் சேர்த்து கீரை வெந்ததும், உருளைக்கிழங்கை இட்டு கிளரவும்.
3.  யாவும் ஒன்றாகச் சேர்ந்து வரும் போது இறக்கி, ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக்கொள்க.
4.  வாயகன்ற பாத்திரத்தில்ரோட்டிக்கான மாவில் ஒருகப் மாவை இட்டு, உப்பும் சேர்த்து, தண்ணீர் விட்டு குழைத்து, அரை மணி நேரம் ஊறவிடவும்.
5.  ரோட்டி மாவை சிறு சிறு உருண்டைகளாகப் பிரித்து, கிண்ணம் போல் செய்து அதற்குள் ஒவ்வொன்றுள்ளும் ஒவ்வொரு உருளைக்கிழங்கு உருண்டையை வைத்து மூடி தனித்தனி உருண்டைகளாகப் பிடித்துக் கொள்க. 
6.  மிகுதி மாவை ஒரு தட்டில் தூவி உருண்டைகளை வட்டமான ரொட்டியாகத் தட்டி வைக்கவும்.
7.  தட்டையான பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கி, தட்டிய ரொட்டியை இருபக்கமும் பொன்னிறமாகச் சுட்டு எடுக்கவும். 

   

No comments:

Post a Comment