Thursday 16 February 2012

தூய நின்னோடு வருவேன்


                    பல்லவி
பச்சைமயில் மீதமர்ந்து
பவனிவரும் பாவகியே!
               சரணம்
இச்சைகள் இல்லை எனக்கு ஓர்
இரவினில் நீ வந்தால் போதும்
துச்சமென யாக்கை துறந்தே
தூய நின்னோடு வருவேன்
அச்சமில்லை எனக்கு இந்த
அவனியின் மாந்தர் தமக்கு சா
உச்சநிலை நீ அருள வேண்டும்
உறுபவ அந்தம் அகன்றிடவே.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment