Saturday 11 February 2012

அடிசில் 13

பிஞ்சுப் பலாக்காய்க் கறி
                                                      - நீரா -

தேவையானவை:
பிஞ்சுப்பலாக்காய்  -  2 டின் 
வெங்காயம் (வெட்டியது)  -  1
பச்சைமிளகாய் (வெட்டியது)  -  3
இஞ்சி (அரைத்தது)  -  1”
உள்ளிப்பூடு (அரைத்தது)  -  3
தேங்காய்ப் பால்  -  2 மே.கரண்டி 
புளி  -  கொஞ்சம் 
கறிவேப்பிலை  -  கொஞ்சம்
கறுவாப்பட்டை  -  கொஞ்சம்
ஏலம்  -  கொஞ்சம் 
கடுகு  -  1 தே.கரண்டி
மிளகாய்த்தூள்  -  2 தே.கரண்டி 
மஞ்சள் தூள்  -  1தே.கரண்டி
மிளகு தூள்  -  1 தே. கரண்டி 
எண்ணெய்  -  1 மே.கரண்டி 
சுவைக்கேற்ற அளவு உப்பு
செய்முறை:
  1. பலாக்காய் துண்டுகளை சிறிய துண்டுகளாக வெட்டவும்.
  2. வெட்டிய பலாக்காயுடன், அரைக்கப் நீரில் கரைத்தபுளியும் உப்பும் சேர்த்து பிரசர்குக்கரில் அவிக்கவும்.
  3. பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெங்காயம், பச்சைமிளகாய், கற்வேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  4. இதற்குள் தேங்காப்பால் தவிர்ந்த மிகுதிப் பொருட்களை இட்டு கிளறி வாசனை வரும் பொழுது அவித்த பலாக்காயை இதனுடன் சேர்த்து சிறிது நேரம் வேகவிடவும்.
  5. தேங்காய்ப் பாலை விட்டு தடித்து வரும்பொழுது இறக்கவும்.

No comments:

Post a Comment