Monday 20 February 2012

அடிசில் 14


இறால் பகோடா
                                         - நீரா -

தேவையானவை:
சுத்தம் செய்த இறால்  -  150 கிராம்
கடலைப் பருப்பு   -  250 கிராம்
கடலை மா  -  50 கிராம்
வெள்ளை அரிசி மா  -  50 கிராம்
வெட்டிய பச்சை மிளகாய்  -  6 - 7
வெட்டிய வெங்காயம்  -  2 மே.கரண்டி
வெட்டிய இஞ்சி  -  2 தே.கரண்டி
வெட்டிய கறிவேப்பிலை  -  கொஞ்சம்
சீரகம்  -  1 தே.கரண்டி 
மிளகுப் பொடி  -  1 தே.கரண்டி
செத்தல் மிளகாய்ப் பொடி  -  2 தே.கரண்டி
உப்பு  -  தேவையான அளவு
எண்ணெய்  -  பொரிப்பதற்கு
செய்முறை:
  1. கடலைப்பருப்பை கழுவி அரைமணி நேரம் ஊறவிட்டு வடித்து அரைப்பதமாக அரைக்கவும்.
  2. இறால் பெரிதாக இருந்தால் சிறிது சிறிதாக வெட்டவும்.
  3. ஒருபாத்திரத்தில் அரைத்த கடலைப்பருப்பு, இறாலுடன் எண்ணெய்யைத் தவிர்த்து மற்றப் பொருட்களைச் சேர்த்து இறுக்கமாக உதிர்ந்து விழும் பதத்தில் நீர் தெளித்துக் குழைத்துக் கொள்க.
  4. இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும்.
  5. எண்ணெய் கொதித்ததும் அதனுள் குழைத்த கலவையை பகோடாபோல் உதிர்த்தி போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

No comments:

Post a Comment