Saturday 11 February 2012

ஆசைக்கவிதைகள் - 20


கன்னிமயில் 


ஆண்:  கன்னிமயில் நீயானால்
            கார்மேகம் நானாவேன்
பெண்:  கார்மேகம் நீயானால்
             கடுங்காற்றாய் சீறிடுவேன்
ஆண்:  கடுங்காற்றாய் நீயானால்
            படுமலையாய் நானாவேன்
பெண்:  படுமலையாய் நீயானால்
             எரிமலையாய் வெடித்திடுவேன்
ஆண்:  எரிமலையாய் நீயானால்
            இருங்கடலாய் நானாவேன்
பெண்:  இருங்கடலாய் நீயானால்
             கருநிலமாய் பிளந்திடுவேன்
ஆண்:  கருநிலமாய் நீயானால்  
            கருநாகம் நானாவேன்
பெண்:  கருநாகம் நீயானால்
              கன்னிமயிலாய் கொத்திடுவேன்.  
                                          -  நாட்டுப்பாடல் (வரிக்கூத்தூர்) 
                                         (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

No comments:

Post a Comment