Sunday 1 March 2015

ஷீனோவும் குரங்கும்


















குரங்குக் குட்டி ஒன்று வந்து
        தோளில் தொற்றிக் கொண்டது
கால் இரண்டால் கட்டிக் கொண்டு
        பல கதையும் சொன்னது
குரங்கின் வாலைப் பிடித்துக் கொண்டு
        குனிந்து நடக்கச் சொன்னது
குரங்கின் வாலைப் பிடித்து நானும்
        குனிந்து நடக்கக் கண்டதும்
குரங்கு இரண்டு வந்தது என்று
         தந்தை மனது சொன்னது
என் தந்தை மனது சொன்னது
        எந்தன் மனது மகிழ்ந்தது!
                         - சிட்டு எழுதும் சீட்டு 97

No comments:

Post a Comment