Sunday 15 March 2015

விந்தை உலகமெடா மகனே!


விந்தை உலகமெடா மகனே! - இஃதோர்
விந்தை உலகமெடா!

பெண்ணைக் கடவுளென்பார் - தாமே
பெண்ணை அடிமைசெய்வார்

கண்ணே மணியேயென்பார் - தாமே
காலால் உதைத்திடுவார்

தாலியே வேலியென்பார் - தாமே
தாலியை அறுத்திடுவார்

தாரமே தாயேயென்பார் - தாமே
தாரமே பாரமென்பார்

தாயே கோயிலென்பார் - தாமே
பேயே நாயேயென்பார்

பெண்ணின் கற்பேயென்பார் - தாமே
கற்பை அழித்திடுவார்

பெண்ணே உலகமென்பார் -தாமே
பெண்கருவைச் சிதைத்திடுவார்

பெண்ணை பூவேயென்பார் - தாமே
பெண்ணுறுப்பை வெட்டிடுவார்

விந்தை உலகமெடா மகனே! - இஃதோர்
விந்தை உலகமெடா!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment