Wednesday 11 March 2015

கோணாசலத்து அமுதனே!

அருள்மிகு திருக்கோணேஸ்வர நாதர்
வணக்கப் பாமலர்
- இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் - [எனது தந்தை]
                                                                   
பாதால தடாகம் மலர்ந்தருளு பாதமலர்
       பலகோடி உயிர்கள் காக்கும்
பண்பொழுகு செம்பவள திருமேனி  உலகேலாம்
      பரந் தண்ட கோளமூடும்
வேதவொலி வீணையொலி யோதிமுனி வோர்தொழ
  விளங்கி யருள் நடராசனார்
வீசுகரங்கள் திசை யாவுநிறை வாகவொரு
      யாமள சவுந்தரி தொழ
நாதவடி வானபர மானந்த நயனமும்
      நால்வேத மோது வாயும்
நவரத்ன கிரீடமும் குண்டலந் தோடசைய
      நலமேவு குமிழ் மூக்குமாய்
காதலொ டமர்ந்தழகு வடிவான மாதுமை
      கலந்தபுன் சிரிப்பி னுடனே
கைலாச தரிசனந் தந்தெம்மை யாண்டருள்
      கோ ணாசலத் தமுதனே
இனிதே,
தமிழரசி

No comments:

Post a Comment