Thursday 3 February 2022

காத்தருள்வாய் அம்மா!

துஞ்சும் உயிர்கள் யாவும் துடித்தே
              துவள்தல் கண்டு மனம் பதைத்தேன்

நெஞ்சம் உருக உகுக நினைந்தே

   நாளும் வாழ்வைக் கழித்தேன்

தஞ்சம் நீயே யென்று உணர்ந்தே

   தாயே எனக்கூவி அழைத்தேன்

கொஞ்சங் கருணை காட்டி யணைத்தே

   காத் தருள்வாய் அம்மா

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment