பல்லவி
ஓடிவருவாயா எம் உங்குளிரவே
ஒரு மாமயில் மீதினிலே
- ஓடிவருவாயா
அனுபல்லவி
நாடிவரும் அடியவர்க்கு நிதம்
நன்மைகள் தரவே விரைந்தே
- ஓடிவருவாயா
சரணம்
பாடிவரும் பக்தர் பழவினை பாறவும்
தேடிவரும் தொண்டர் துயர் தீரவும்
ஆடிவரும் அன்பர் ஆனந்தம் பெறவும்
கோடியுடுத்தும் குரையா கண் எதிரே
- ஓடிவருவாயா
இனிதே,
தமிழரசி.
குறிப்பு:
சொல்விளக்கம்
நிதம் - நாளும்
பாறவும் - அழியவும்
No comments:
Post a Comment