Wednesday 16 February 2022

ஓடிவருவாயா எம் உளங்குளிரவே

                        பல்லவி

ஓடிவருவாயா எம் உங்குளிரவே

ஒரு மாமயில் மீதினிலே

- ஓடிவருவாயா

அனுபல்லவி

நாடிவரும் அடியவர்க்கு நிதம்

நன்மைகள் தரவே விரைந்தே

- ஓடிவருவாயா

சரணம்

பாடிவரும் பக்தர் பழவினை பாறவும்

தேடிவரும் தொண்டர் துயர் தீரவும்

ஆடிவரும் அன்பர் ஆனந்தம் பெறவும்

கோடியுடுத்தும் குரையா கண் எதிரே

- ஓடிவருவாயா

இனிதே,

தமிழரசி.


குறிப்பு:

சொல்விளக்கம்

நிதம் - நாளும்

பாறவும் - அழியவும்

No comments:

Post a Comment