சொல்லறியாப் பாலகன் யான்
செய்த குற்றம் யாது சொல்வீர்
தொல்லையேது தந்தே னோ
தந்தை தாய் உயிர் பறித்தீர்
பொல்லாப்போன வாழ்வைப் பார்த்து
பதைத்த என் உணர்வைப் பாரீர்
வல்லரசென்று கூறி வகை
வகையாய்ப் படை வகுப்பீர்
கொல்லரசாய் மாறி நின்று
கொலை செய்யும் கூற்றானீர்
கல்லைனெஞ்சிற் சுமந்து வாழும்
கவலை யில்லா மானுடரீர்
எல்லையற்ற உல கதனில்
என்ன இல்லைச் செப்பீர்
வெல்லும்படை யேது ஈங்கே
வெறுமை மிஞ்சும் காண்பீர்!
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment