Thursday 24 February 2022

தாழிசையை மீட்டியுகந்தாய்

பந்தமனப் பக்கதர்கள் பாடிய வேளை

  பைந்தமிழின் பாவிசையைக் கேட்டுகந்தேன்

நொந்தமன வேதனையில் நைந்துருகா வேளை

  நெஞ்சமதிற் தாழிசையை மீட்டியுகந்தாய்

சொந்தமெனக் கருதி நாடிவந்த வேளை

  சந்தமிகு தமிழிசையில் பாட்டிசைத்தாய்

கந்தமனக் கந்தனாய் காட்சிதந்த வேளை

  கழலிணையின் தண்டிசையைக் காட்டிமறைந்தாய்

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment