Tuesday 6 November 2018

தொழுதிட போமோ சொல்!



புண்டரிகம் பூக் காதோ
     பூமழை தான் பெய்யாதோ
வண்டிருந்து பா டாதோ
     வளைக்கரந் தான் கொய்யாதோ
கண்டுவந்த நாள் முதலாய்
     கவலை கொண்டு வாடுகிறேன்
தொண்டு தொட்டு வந்ததுயர்
     தொழுதிட போமோ சொல்


சொல்விளக்கம்:
புண்டரிகம் - தாமரை மலர்

இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment