Thursday 25 May 2017

எல்லை இல்லை ஐயையோ!


இல்லை இல்லை என்போர்க்கு - ஓர்
எல்லை இல்லை ஐயையோ
எல்லை இல்லா வளம் - உல
கெங்கனும் நிறைந் திருக்க
தொல்லை வாழ்வி தென்று - துடி
துடித்து ஏங்கித் தினம்
பல்லைக் காட்டித் தெரு - ஓர
பிச்சைக் கலை மாதர்
பிள்ளை செய் பிழை - ஏது
பெம்மானே நீ கூறு!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment