Thursday, 11 May 2017

உயிரோடு உறவாடும் உயிரே!

           
                        பல்லவி
உனைநான் அறிவேன் கந்தக் கடம்பா
என்னுயிரோடு உறவாடும் உயிரே
                                                 - உனை நான்

                    அனுபல்லவி
நினைத் தேடி வருவோர்க்கு என்றும்
நிதிநல்கி நற்குணம் நல்கு கந்தா
                                                 - உனை நான்

                      சரணம் 
தினைப் போதும் நினையாது வினையாலே
தடுமாறி தடம் மாறிப் போகுமெமை
மனைநாடி மனம்நாடி ஓடி வந்தே
மலர்க்கழல் காட்டி மணம் ஊட்டுவாய்
                                                    - உனை நான்
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment