பல்லவி
உனைநான் அறிவேன் கந்தக் கடம்பா
என்னுயிரோடு உறவாடும் உயிரே
- உனை நான்
அனுபல்லவி
நினைத் தேடி வருவோர்க்கு என்றும்
நிதிநல்கி நற்குணம் நல்கு கந்தா
- உனை நான்
சரணம்
தினைப் போதும் நினையாது வினையாலே
தடுமாறி தடம் மாறிப் போகுமெமை
மனைநாடி மனம்நாடி ஓடி வந்தே
மலர்க்கழல் காட்டி மணம் ஊட்டுவாய்
- உனை நான்
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment