Sunday 28 February 2016

சிறப்புறக் காத்தருள்கவே!

திருக்கோணேஸ்வர நாதர்
வணக்கப் பாமலர்
- இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் - [எனது தந்தை] 

நான் மறையி னாரந்த நால்வரந் தணருய்ய
         நலமேவு வடாஆல் நிழல்
ஞானநிறை வானவொரு யோகநிலை தாமருவி
         மோனத் திருந்த குருவே
மேன்மைதரு கனகசபை யிரதசபை யதனுடன்
         மெத்தென்ற ரதன சபையும்
மேவரிய தாமரம் கோணாசலந் திகழ்
         சூடா மணிச் சபையிலும்
ஆன்மகோ டிகளுய்ய அடியாரு ளத்திலும் 
         அனவரத நடன மாடும்
அன்னமென் நடையம்மை பங்கனார் கங்கைவார்
         அனலென்ன செஞ் சடையினார்
தேனன்ன செந்தமிழ் தெரிந்த சங்கப்புலவ
        தென் பொதிகைமலை வள்ளலே
தெண்டனிட் டனமெங்கள் பண்டையர சீந்தெமைச்
         சிறப்புறக் காத்த ருள்கவே
இனிதே,
தமிழரசி.

2 comments:

  1. சிந்திக்கச் சிறந்த பாவரிகள்

    ReplyDelete