Saturday 27 February 2016

கதிரடிக்கும் பிஞ்சுக் கரங்கள்!


குவிந்து கிடந்தது நெற்கதிர்ச் சூடு
குனிந்து எடுத்தான் குழந்தை தன்கையில்
கவிந்து தூங்கும் நெற்கதிர் தன்னை
கலைத்து அடுக்கி அடித்தனன் கல்லில்
பொவிந்து வீழ்ந்தன நெல் மணிகள்
புதைந்தன கால்கள் நெல்மணி இடையே
உவிந்து வீழ்ந்த வியர்வைத்துளி கண்டும்
உவந்து கதிரடிக்கும் பிஞ்சுக் கரங்கள்.
                                                                                           - சிட்டு எழுதும் சீட்டு  111

No comments:

Post a Comment