Tuesday 23 February 2016

அடிசில் 94

பொட்டுக்கடலைத் துவையல்
- நீரா -

தேவையான பொருட்கள்: 
துருவிய தேங்காய்ப்பூ  -  1½ கப்
பொட்டுக்கடலை  -  ½ கப்
பச்சை மிளகாய்  -  6
உப்பு  -  தேவையான அளவு
புளி  -  சிறிதளவு

தாளிக்க தேவையானவை
கடுகு  -  ½ தேக்கரண்டி
உழுந்து  -  ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை  -  5
எண்ணெய்  -  2 தேக்கரண்டி

செய்முறை:
1. தேங்காய்ப்பூ, பொட்டுக்கடலை, பச்சைமிளகாய், உப்பு, புளி யாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பட்டுப் போல் அரைத்தெடுக்கவும்.
2. ஒரு சிறு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் கடுகைப் போட்டு வெடிக்க விடவும்.
3. கடுகு வெடிக்கும் போது உழுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, உழுந்து பொன் நிறமாக வரும்போது இறக்கி அரைத்து வைத்துள்ள துவையலில் கொட்டி நன்கு கலந்து கொள்க.


குறிப்பு: வெங்காயம் சேர்க்காத இந்தத் துவையல் உடனே கெட்டுப் போகாது. விரும்பினால் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கலாம். இத்துவையலை வெண்பொங்கல், ரவைப் பொங்கல், தோசை போன்றவற்றோடு உண்ணலாம்.

No comments:

Post a Comment