Wednesday 10 February 2016

உயிர்த்தமிழை ஈழத்தொளிர வைப்போம்

எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன்[என் தந்தை]
[1956]

                                    பல்லவி
தமிழ்தமிழ் தமிழ்எங்கள் உயிர்தமிழ் தரணியில்
அமிழ்தினுமினிய செந்தமிழ் நிலை காப்போம்
                                
                                    சரணம்
இயல்இசை நாடகம் எனத்தளை தனித்தமிழ்
ஈசனும் ஏட்டினில் எழுதி மகிழ்ந்ததமிழ்

சங்கமிருந்த தமிழ் தரணியை ஆண்டதமிழ்
எங்கள் உயிர்த்தமிழை ஈழத்தொளிர வைப்போம்

அறம்பொருள் இன்பமும் வீடுமளிக்கும் தமிழ்
அகத்தியன் இலக்கணம் அருளிய வருந்தமிழ்

உலகினில் இயலுமா றாயிர மொழிகளுள் 
முன்மொழி தமிழெனு மேன்மைதெளிய வைப்போம்

இனிதே,
தமிழரசி.


No comments:

Post a Comment