Sunday 28 September 2014

பாரின் பசுமை மீண்டிடுமோ!!


காட்டுமரம் தேடிவெட்டி
காலை மாலை சமையல் செய்தோம்
துட்டுநிதம் காணவேண்டி
ஆலை ஆலை கடுதாசி செய்தோம்
கட்டுமரம் கட்டிகொண்டு
அலை மேலை கப்பல் செய்தோம்
நாட்டுமரம் யாதுமில்லை
நாளை வேளை யாது செய்வோம்
வீட்டுமரம் நடுவாரில்லை
வேலை வேலை யாது செய்வோம்
பட்டமரம் காணவில்லை
பாலை நிலை ஆகச் செய்தோம்
பட்டமரம் தளைத்திடுமோ!
பாரின் பசுமை மீண்டிடுமோ!!
                                                       - சிட்டு எழுதும் சீட்டு 91

No comments:

Post a Comment