Wednesday 17 September 2014

அன்பே உயிர்

அன்பின் பிணைப்பில் அகிலம் மகிழின் 
துன்பின் துயரம் துளியும் அணுகா
இன்ப நலங்கள் இனிதே நிறைய
என்போ டியைந்த உயிர்கள் யாவும்
அன்போ டியைந்து அமைதி காணும்
இன்ப நாளை இன்றே காண
சின்னச் சின்ன சேட்டை செய்யும்
சின்னக் குரங்கு செங்கரம் தன்னால்
அன்பொடு அணைக்க அமைதி காத்து
இன்பம் காண இசையும் குட்டிப்பூனை
மன்னுயிர் யாவும் மகிழ்ந்து வாழ
அன்பே உயிரென அரற்றல் காண்க!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment