Friday 8 June 2012

வலைச்சி மக வருவாளா!

ஆசைக் கவிதைகள் - 34
Photo courtesy - The Telegraph




















ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!
பாட்டுப்பாட மனமிருக்கா? ஏலேலங்கடி ஏலேலோம்! 
பாட்டுபாட மனமிருக்கு பக்கதுணைக்கு யாரிருக்கா?
ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்! 
பக்கதுணைக்கு படகிருக்கு ஏலேலங்கடி ஏலேலோம்!
பக்குவமாய் பாத்து துடுப்பு போடணுமே!
ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!
துடுப்பெடுத்து போடயில ஏலேலங்கடி ஏலேலோம்! 
தூக்குமந்த கடலலய அடுத்தடுத்து மடக்கணுமே!
ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!
அடுத்தடுத்து மடக்கயில ஏலேலங்கடி ஏலேலோம்!
அள்ளிவரு மீனலய வலவீசி பிடிக்கணுமே!
ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!
வலவீசி பிடிக்கயில ஏலேலங்கடி ஏலேலோம்! 
வலயறுந்து போகாம வாரி எடுக்கணுமே!
ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!
வாரி எடுக்கயில ஏலேலங்கடி ஏலேலோம்! 
வாளமீனு வளத்திமீனு வகவகயாய் பிரிக்கணுமே!
ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!
வகவகயாய் பிரிக்கயில ஏலேலங்கடி ஏலேலோம்! 
வலச்சிமக வருவாளா! வலகைய தருவாளா!
ஏலேலங்கடி ஏலேலோம்! ஏலேலங்கடி ஏலேலோம்!
                                                                      -  நாட்டுப்பாடல் (புங்குடுதீவு)
                                           - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 
குறிப்பு:
புங்குதீவில் 1939ல் வாழ்ந்த சுழிகாரர் நாகனாதி என்பவர் பாடித்திரிந்த பாடல் 

No comments:

Post a Comment