Sunday 17 June 2012

தந்தையர் தினம்

Mrs Grace Golden Clayton
இன்று உலகின் பல நாடுகளிலும் தந்தையர் தினத்தை கொண்டாடுகின்றனர். மேற்கு வேஜினியாவில் 1908ம் ஆண்டு யூலை மாதம் 5ம் திகதி தந்தையர் தினத்தை முதன்முதல் கொண்டாடத் தொடங்கினர்.    அதனை திருமதி கிரேஸ் கோல்டன் கிலேடன் (Mrs Grace Golden Clayton) என்பவரே தொடங்கி வைத்தார்.
மேற்கு வேஜினியாவின் நிலச்சுரங்கமொன்றில் 1907ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் திகதி நடந்த விபத்தில் இருநூற்றிப் பத்து தந்தையர் உயிரிழந்தனர். அவர்களின் நினைவாகவே தந்தையர் தினக் கொண்டாட்டம் தொடங்கப்பட்டது. திருமதி கிலேடன் (Glayton) என்ன நோக்கத்திற்காக தந்தையர் தினம் கொண்டாடத் தொடங்கினாரோ அது 1972ம் ஆண்டு வரை கொண்டாடப்படாது கைவிடப்பட்டு இருந்தது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரிக்சாட் நிக்சனே 1972ம் ஆண்டு யூன் மாதத்தில் வந்த மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையையை தந்தையர் தின விடுமுறை நாள் ஆக்கினார். அன்றிலிருந்து தந்தையர் தினம் உலகெங்கும் பல நாடுகளில் கொண்டாடப்படுகின்றது. தமிழர்களாகிய நாம் இறந்த எம் தந்தையர்க்காக ஆடியமாவாசை அன்று தந்தையர் தினத்தைப் பன்நெடுங்காலமாகக் கொண்டாடி வருகின்றோம். 

No comments:

Post a Comment