Monday 25 June 2012

அருளைத் தாராய்


உள்ளத்திருந்தே உணர்ச்சி தந்து
கள்ள மலத்து கழிவை அகற்றி
தெள்ளு தமிழில் தினமும் பாட
அள்ளி எனக்கு அருளைத் தாராய்.

தாராதிருந்தால் தளர்ந்தே போவேன்
வாராய் இங்கே வடிவேல் அழகா
ஊரார் பலரும் உவப்ப என்றும்
தீரா வினைகள் தீர்த்து அருள்வாய்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment