Saturday 30 April 2016

வாழ்வின் இன்பம் வழங்கிய கொடையே!

மரணம் என்பது மகிழ்ச்சியின் எல்லை
மானுட வாழ்வின் முடிவினைக் காட்டும்
கரணம் தப்பின் மரணம் உண்டாகும்
கருவின் உயிரும் மரணம் எய்தும்
தருணம் தன்னில் தப்பிய உயிரும் 
தாயின் வயிற்றில் தங்கிய கருவும்
விரணம் எய்தின் மரணம் அடையும்
வாழ்வின் இன்பம் வழங்கிய கொடையே!
இனிதே
தமிழரசி.

No comments:

Post a Comment