Tuesday 5 April 2016

அடிசில் 96

ரவைப் பொங்கல்
- நீரா -


தேவையான பொருட்கள்: 
ரவை  -  1 கப்
வறுத்த பயறு  -  ½ கப்
முந்திரிப் பருப்பு  -  15 கிராம்
வெட்டிய பச்சை மிளகாய்  -  1 தேக்கரண்டி
அரைத்த இஞ்சி  -  ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை கொஞ்சம்
நெய்  -  1 மேசைக் கரண்டி
மிளகு  -  1 தேக்கரண்டி
சீரகம்  -  1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்  -  ½ தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

செய்முறை: 
1. வாயகன்ற ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய்விட்டு பாதியாக உடைத்த முந்திரிப்பருப்பைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
2. அப்பாத்திரத்துள் ரவையைப் போட்டு பொன்நிறமாக வறுத்து எடுக்கவும்.
3. அப்பாதிரத்துள் பயற்றையும்,மஞ்சள் தூளையும் இட்டு ஒன்றரைக் கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பயறு வெந்ததும் அதை நன்கு மசித்தெடுக்கவும்.
4. மசித்து எடுத்த பயற்றுடன் இன்னும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
5. கொதிக்கும் பயற்றினுள் ரவையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளறி வேகவிட்டு தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.
6. அடிப்பக்கம் தடித்த வாயகன்ற பாதிரத்தை அடுப்பில் வைத்து மிகுதியாக இருக்கும் நெய்யைவிட்டு சூடாக்கி கறிவேப்பிலை, மிளகு, சீரகம் சேர்த்து தாளித்து, மிளகு நெய்யில் மிதக்கும் போது இஞ்சு, பச்சைமிளகாய், முந்திரிப்பருப்பு இட்டு வதக்கவும்.
7. அதற்குள் வேகவைத்திருக்கும் ரவைக்கலவையைக் கொட்டிக் கிளறுக. யாவும் ஒன்றகக் கரண்டியுடன் சேர்ந்து வரும் பொழுது இறக்கவும்.

குறிப்பு:
பயற்றைப்போல் மூன்று மடங்கு தண்ணீரும் ரவையைப்போல் இரு மடங்கு தண்ணீரும் அவிப்பதற்கு விடவேண்டும்.

No comments:

Post a Comment