Thursday 7 April 2016

கசிந்திடும் கண்ணே!

மதுரை வெள்ளியம்பலம் 
கால்மாறி ஆடிய நடராசர்

சொந்தமில் குணம் களை சொக்கனே
         சொக்கியே நின்று சேவித் தெழுந்து
அந்தமில் ஆனந்த அற்புதத் தாண்டவ
         அழகினைக் கண்டு ஆனந்தம் கொண்டு
பந்தமில் மனத்து பரிந்துனை வைத்து
         பைந்தமிழ் தேனை சொரிந்துனை போற்றி
கந்தமில் உள்ளக் கோயிலின் உள்ளே
         கண்டு கண்டு கசிந்திடும் கண்ணே!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment